Wednesday 4 January 2012

இமாலய டிரெக்கிங் 2011 - 12





“பாதை இல்லாத காடுகளில் ஒரு சந்தோஷம் உள்ளது, யாரும் இல்லா கரையில் பேரானந்தம் கிடைக்கிறது. நம்மை தவிற மனிதர்கள் யாரும் இல்லாத சமுகம் ஒன்று இருக்கிறது, கடலுக்கு அடியில், மலை உச்சியில், இயற்கை எனும் சாம்ராஜ்ஜியத்தில் மரங்கள், விலங்குகள் ஆட்சி புரியும் அந்த இடம். நான் மக்களை வெறுக்கவில்லை, ஆனால் இயற்கையை பெரிதும் நேசிக்கிறேன்.”  - பைரன்.

நீண்ட நாட்களாக இமயமலையின் இயற்கை காட்சியை இரசிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கணவு,  இதற்க்கு முன் இரண்டு முறை சென்றிருந்தாலும், அது ஒரு குடும்ப சுற்றுலா போல் அமைந்தமையால் அவ்வளவாக பிடிக்கவில்லை. அவசர அவசரமாக எல்லா கோவில்கள், பூங்காக்களை சுற்றி வருவதில் சிறிதும் உடன்பாடு இல்லாதமையால் தனியாக செல்ல முடிவெடுத்தேன்.

Yha என்ற ஒரு அமைப்பு, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டல்ஹௌசி என்னும் இடத்திலிருந்து ஆறு நாட்கள் காட்டுவழிப்பாதையில் ட்ரெக்கிங் செய்வதற்க்கான திட்டத்தை அறிவித்திருந்தது. கடைசி நேரத்தில் தகவல் தொடற்புத்துறை வளர்ச்சியின் பயனால் பதிவு செய்து அந்த அமைப்பின் தற்காலிக அடையாள அட்டையும், ட்ரெக்கிங்    செல்வதற்கான  அனுமதி அட்டையையும் மின்னஞ்சலில் பெற்றேன்.


இன்னும் மூன்று தினங்களில் ஜம்மு அருகே உள்ள பானிகேட் என்ற இடத்தில் ட்ரெக்கிங் ஆரம்பமாகும் என மின்னஞ்சல் வந்தது. வேறு வழி இல்லையென்றால் மட்டுமே விமான பயணம் மேற்கொள்ளும் பழக்கம் என்னிடம் உண்டு. அதனால் அடுத்த நாள் சென்னையில் இருந்து டில்லி செல்லும் துரந்தோ இரயிலில் irctcயில் டிக்கெட் எடுத்தேன். டில்லியில் இருந்து ஜம்மு செல்ல அனைத்து டிக்கெட்டும் வைட்டிங் லிஸ்டில் இருந்ததால் நண்பனிடம் சொல்லி அடுத்த நாள் தட்கலில் எடுக்க சொன்னேன்.



திங்கள் காலை துரந்தோ எக்ஸ்பிரஸில் பயணம் இனிதே துவங்கியது. இரயில் பயணத்தை பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கே தனி பதிவு போட வேண்டியிருக்கும்.



இரயில் பயணம்
நாள் 1,2 துரந்தோ எக்ஸ்பிரஸ் சென்னை – டில்லி
நாள் 2,3  உத்தர் எஸ் கிராந்தி எக்ஸ்பிரஸ் டில்லி – பதங்கோட் , பஞ்சாப்.

பஸ் பயணம்.




நாள் 3. பத்ங்கோட் – பானிகேட், ஹிமாச்சல பிரதேசம்.

தமிழனென்பதால் பத்து ருபாய் ஷேர் ஆட்டோ பயணத்திற்கு என்பது ருபாய் அழுதேன். அவன் முதலில் கேட்டது 200 ருபாய். எனக்கு தெரிந்த எக் காவ் மே எக் கிஸான் ரஹதாத்தா!  ஹிந்தியில் பேரம் பேசி 80 ருபாய்க்கு வர சம்மதித்தான்.

துங்கும் பை



பானிகேட்டில் முதல் முகாமை வந்தடைந்தேன், இரண்டுநாள் தொடர் பயணத்தால் மிகவும் கலைப்பாக இருந்தது. என்னுடைய அடையாள அட்டையும் மருத்துவ சான்றிதழையும் சரி பார்த்துவிட்டு எனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் சென்று ஓய்வெடுத்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு கண்விழித்த பொழுதுதான் தெரிந்தது  அந்த 10*10 அறையில் பதினோறு பேர் உறங்க வேண்டும் என்பது. ஸ்லீப்பிங் பேக் ஒவ்வொருவருக்கும் தனியாக கொடுத்திருந்தமையால், இரவில் அனைவரும் எகிப்து மம்மி போல் அந்த பையில் எதிர் எதிரே படுத்துக்கொண்டோம். காலை ஆறு மணிக்கு டீ கொடுத்தனர்.

நாள் 4. பானிகேட்-டல்ஹௌஸி  நடைபயணம்.




புதிதாய் காடுகளில் நடப்பவர்களின் நலனுக்காக முதல் நாள் ஐந்து கி.மி. தூரம் மட்டுமே பயணம் செய்யப்போவதாக அறிவித்தனர். பானிகேட்டிலிருந்து டல்ஹௌஸி வரை பாதி தூரம் காடுகளிலும், மீதி தூரம் வாகனங்கள் செல்லும் பாதையிலும் இருந்தது. ஏற்கனவே எனக்கு நிறைய அனுபவம் இருந்ததால் இரண்டு மணி நேரத்தில் முதல் ஆளாக டல்ஹௌஸி வந்து சேர்ந்தேன். 

இந்த டிரெக்கிங்கில் அதிநவீன வசதிகள் படைத்த விடுதி இதுதான், அதாவது கட்டில், போர்வை, தலையனை, சுடான நீர் ஆகியவை அடங்கும். கூட வந்த டாக்டர்களுடன்  கிரிக்கெட் விளையாடினேன்.



அருகே இருந்த மைதானத்தில்  குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பெண்கள் பல பேர் வந்திருந்தது ஆச்சிரியமாக இருந்தது.  இரவு கேம்ப்இல் அனைவரும் ஹிந்தி பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். என் முறை வர   கொலவெறி பாடலை நான் பாட அனைவரும் கூட சேர்ந்து பாடினர்.  ஐம்பது பேரில் இருவர் மட்டுமே தமிழர்களாக இருந்தும் அனைவருக்கும் அந்த பாடல் தெரிந்திருந்தது. துங்கும் முன் அனைவருக்கும் பருக பூஸ்ட் கொடுத்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு இரவு 9 மணிக்கு தூங்கினேன்

நாள் 5. டல்ஹௌஸி-காலாடாப் டிரெக்.




முதல் நாள் சுலபமாக கடந்தவர்களுக்கு சற்று கஷ்டமாக இருக்க . உண்மையாக டிரெக்கிங் அனுபவம் இங்குதான் துவங்கியது. காடுகளுக்கு நடுவே குளிரில் ஆரம்பித்த பயணம், வழி நெடுக  பைன் மரங்கலாலும், பறவைகளாளும் நிறைந்திருந்தன.  முதலில் செல்வதன் பயனால்   அறிய காட்டு கோழியையும், ஹிமாச்சல பிரதேசத்தின் பிரத்யேக பறவையையும், கரடியையும் இயற்கையில் பார்க்கும் அனுபவம் கிடைத்தது. காலையிலேயே மதிய உணவாக இரண்டு ரொட்டியும் உருளைக்கிழங்கும் yhai அமைப்பினர் கொடுத்திருந்தார்கள் வழக்கம்போல் முன்பே வந்ததால் எனக்கு மட்டும் இரண்டுமணி நேர ஓய்வு கிடைத்தது. காலாடாப் அந்த பகுதியிலேயே உயரமான சிகரமாகும் ஊட்டிக்கு தொட்டபேட்டா போல். 





 உயரத்திற்கு தகுந்தார்போல் குளிரும் இருந்தது. சுற்றி உள்ள பனிமலைகளே அதற்கு சாட்சியாக இருந்தது. ஏழு மணிக்கு மேல் கடும் குளிர் நிலவும் என்பதால் ஆறு மணிக்கெல்லாம் இரவு சாப்பாடை முடித்துக்கொண்டு அவரவர் டெண்டுகளுக்கு சென்று உறங்கும் பையில் அடைக்கலமானோம். அடுத்த நாள் காலை கடண்களை முடித்த பொழுது frozen ass என்பதன் அர்த்தத்தை அறிந்துகொண்டேன்.

நாள் 6. காலாடாப்-கஜ்ஜையார் டிரெக்


இதுவும் 90 சதவிகிதம் காட்டு வழிப்பயணம்.  அடர்ந்த காடுகளுக்கிடையே சூரியவெயில் உட்புகாத வழியில் பயணம் ஆரம்பித்தது. கடந்த ஐந்து வருடங்களாக பயன்படுத்திய பூட்ஸ் தன் கடைசி காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. இரண்டு தையல் விட ஆரம்பிக்க பல இடங்களில் சறுக்க ஆரம்பித்தேன், என் வேகத்தை குறைத்து அனைவருக்கும் வழிவிட்ட பின் தனியாக பிந்தொடர்ந்தேன். பின்பு தான் அது ஒரு பெரிய தவறாக தோன்றியது.  வழுக்கும் பூட்ஸுடன் பின் தொடர்வதால் கஷ்டமாக இருந்தது. மதியம் காடுகளுக்கு நடுவே ஒரு நீர் ஓடையின் அருகே மதிய உணவிற்காக நின்றோம்.


சிறிது நேரம் தூங்கியதன் காரணத்தால்  குளிர் அதிகமாக தெரிந்தது. அங்கே இருந்த சில காட்டுவாழ் மக்கள் தீயை மூட்டி அருகில் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டேன். மதியம் 4 மணிக்கு கஜ்ஜியார் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். பார்க்க மிகவும் ரம்மியமாக தோற்றமலித்தது. ஒரு சிறு ஏரியை சுற்றி புல்வேலி அகலமாக இருந்தது. சிலர் பாரா கிலைடிங்கிலும் ஈடுபட்டனர்.  நாங்கள் தங்கும் இடம் ஏரியை அடுத்து இருந்தது. இருந்த இடத்திற்கு பின்னால் ஒரு பெரிய சிவன் சிலை வடிவமைத்திருந்தனர்.


 முழுக்க வெண்கலத்தினால் அமைந்த சிலையை பார்க்கும் பொழுது தானாகவே கைகள் கும்பிட்டதாக கூட வந்தவர்கள் கூறினார்கள், எனக்கு அதன் சிற்பியை பாராட்ட வேண்டும் என்றே தோன்றியது. இங்கு ஆறு பேருக்கு ஒரு அறை என்று பிரித்தது ஏதோ மாளிகையில் இருப்பது போல் இருந்தது.






நாள் 7 கஜ்ஜையார்-மங்கலா டிரெக்.






கடந்த 4 நாட்களாக ஏறிய மலையை வேறுபாதையில் இறங்க ஆரம்பித்தோம், இறங்கும் போது பலருக்கு முட்டி வலி ஏற்பட்டது, சுமார் 8 கி.மி. இறங்கிய போது அனைவருக்கும் உடலில் உள்ள அனைத்து இனைப்புகளிலும் வலி இருந்தது. இனிதாக டிரெக்கிங் நிறைவுக்கு வந்தது. நாங்கள் தங்கிய இடத்திலிருந்து சம்பா, ஹிமாச்சல பிரதேசத்தில் பழமையான நகரத்திற்கு காரில் சென்றோம். ஆறு நாட்களுக்கு பிறகு ரொட்டி உருளைகிழங்கை தவிற வேறு உணவு ஒரு பதம் பார்த்தோம். ஸ்வீடுடன் இனிதே நிறைவேறியது நடை பயணம்.




நாள் 8. மங்கலா-பானிகேட் பஸ் பயணம்.

நாள் 9 பானிகேட் - பதன்கோட் கார் பயணம், பதன்கோட்-டில்லி ரயில் எக்ஸ்பிரஸ் 
நாள் 9,10,11  டில்லி - சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்  















பி.கு. 1 
முதல் நாள் குளித்ததோடு சரி, மீண்டும் சென்னை வந்துதான் குளித்தேன். ஒரே செட் டிரஸ்தான் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் ஏறும்வரை போட்டிருந்தேன், பாதி வழியில் எடுத்து வந்தோம் என்ற ஒரே காரணத்திற்காக டி ஷர்ட்  போட்டுக்கொண்டு ஒரு போட்டோ கிளிக்கினேன்.


சுமாராக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் மொபைலில் எடுத்தது. மேலும் விவரங்களுக்கு.. :)


Special thanks to Srivatsan, Karthikeyan, Damodaran, Murali.
Photo's courtesy Ravindra Chavan

3 comments:

Unknown said...

anubavam pudumai nanraga irunthathu ungal anubavam

Prabagaran said...

சிறப்பான படைப்பு - இயற்கை மட்டுமல்ல, தமிழ் நடையும்...தான் ! நன்றி !!

ravi said...

நன்றி பிரபாகரன்.

Post a Comment