Thursday 21 June 2012

லீவ் லெட்டர்-1


லீவ் லெட்டர் -1

எவ்வளவு பெரிய உத்தமனா இருந்தாலும் கிட்டதிட்ட எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் இந்த லீவ் (அ) பொய் லெட்டர் எழுதுவது.

பத்தாம் வகுப்பு வரை ஸ்கூல் விட்டா வீடு என்று இருந்து விட்டு, பதினொன்றாம் வகுப்பில் இருந்து ஆரம்பிக்கும் ஸ்பெஷல் கிளாஸ் டியுஷன் போன்ற எக்ஸ்ட்ரா கிளாஸை நமக்கு சாதகமாக பயண்படுத்திக்கொள்வது.
குழந்தைகள் தினத்தன்று வெளியாக இருக்கும் அந்த படத்தை பார்ப்பது என்று முடிவானது, எங்கள் செட்டின் தலைவர் ஆறு டிக்கெட்டுகளை முதல் நாள் மேட்னி ஷோவிற்கு முன்பதிவு செய்துவிட்டார், வழக்கமாக அரைநாள் லீவ் விடும்  எங்கள் பள்ளி அந்த வருடம் முதல் பளஸ் 1 பளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பள்ளி முழு தினமும் இயங்கும் என்ற கொடுஞ்ச்செய்தியை சர்குலரில் அனுப்பியது. முதல் முறையாக சத்தியம் தியேட்டரில் வேறு புக் செய்திருந்தோம், என் ஒரு மாத பாக்கெட் மணியை சேமித்து வைத்த காசு, இதை சும்மா விட கூடாதென்று முடிவு செய்து ரிஸ்க் எடுக்க தயாரானோம்.

ஆறு பேர் ஒன்றாக சென்று லீவ் லெட்டர்  கொடுத்தால் கண்டிப்பாக மாட்டிக்கோள்வோம் என்பதால் லீவ் அப்பிலிக்கேஷன் கொடுப்பதாக முடிவாயிற்று, ஒரே காரணம் இல்லாமல் எல்லோரும் வேறு காரணத்திற்காக லீவ் எடுப்பதாக பேசி வைத்து அனைவரும் எழுதினோம். கண் பரிசோதனை, கல்யாணம், கோயிலுக்கு செல்வது போன்ற காரணங்களுக்கு மத்தியில், என்னிடம் வந்த என் அப்பிளிக்கேஷனை பார்த்து காப்பி அடித்த தலைவர், "கவலபடாத மச்சி, ஃபார்மேட்தான் பார்க்குறேன் கண்டன்ட் மாத்தி எழுதிடறேன் " என்று கூறிய தலையை நம்பியது தவறு என்று அப்போது தெரியவில்லை.

எங்கள் நல்ல நேரம் பிரின்சிபல் விழா ஒத்திகைக்கு சென்றிருந்ததால் லீவ் அப்பிலிக்கேஷனை டேபிலில் வைத்து விட்டு வந்து விட்டோம். ப்ளான் படி  எல்லாம் ஸ்கூல் செல்லும்வரை நடந்தது. அசெம்பளி முடிந்து கிளாசிற்க்கு செல்லும் போது எங்கள் ஆறு பேரின் பெயரை கூறி பிரின்சிபால் ரூமிற்க்கு அழைத்துச்சென்றார் பியுன். சரி லீவை பற்றி கேட்கத்தான் போகிறார், நாம்தாம் அப்பிலிக்கேஷனை முன்பே வைத்துவிட்டோமே ஒரு பிரச்சனை இல்லை என்ற தைரியத்துடன் கிளம்பினோம்

பிரின்ஸிபால் ரூம்.
பி- எதுக்காக நீங்க நேத்து லீவ் போட்டீங்க, காரணத்த எல்லாரும் தனி தனியா  சொல்லுங்க. கையில் நாங்கள் கொடுத்த லீவ் அப்பிலிக்கேஷனுடன்.
1. ஐ செக்கப்
2.கல்யாணம்
3.கோவில்
4.பல் டாக்டர்
5.கோவில்
6. எங்கள் தல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு "ஸ்டொமக் ஏக்"
அனைவருக்கும் பகீர் என்றது.

அவன் கொடுத்த லெட்டரை திரும்ப அவனிடமே கொடுத்து படிக்க சொன்னார்
"as i will be suffering from sever stomach ache tomorrow, please grant me leave" என்று படித்துக்கொண்டிருந்த போதே நாங்கள் அனைவரும் தவறை  ஒப்புக்கொண்டோம். ஒரு வாரம் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டுடெண்ட்ஸ், இம்போஷிஷன், எல்.கே.ஜி டீச்சர் முதற்கொண்டு அனைவரிடமும் திட்டு மற்றும் அட்வைஸ் என எல்லாவற்றை பொறுத்துக்கொண்ட எங்களால் அந்த ஒன்றை மட்டும் மட்டும் மறக்க முடியாது.

இவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் பார்த்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க காவியம்.
.

.
.
.
..
.
.
.
.
.
.


.




லீவ் லெட்டர்கள் பல தொடரும்..




Sunday 3 June 2012

எனக்குள் ஒரு கலைஞர்



எனக்குள் ஒரு கலைஞர்.

சிறு வயது முதல் அரசியலை பொறுத்தவரை என் ஹீரோ கலைஞர் என்று அழைக்கப்படும் மு.க. கருணாநிதிதான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் தமிழ்நாட்டின் முதல்வராக செல்வி ஜெயலலிதா இருந்தார். எங்கள் வீடு அண்ணாசாலை என்றழைக்கப்ப்டும் மௌண்ட் ரோடில் இருந்தது, ஒவ்வொறு முறை முதல்வர் அச்சாலையை கடக்கும் போது எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை பந்த் தினத்தை போல் காட்சியளிக்கும். அவர் வளர்ப்பு மகன் திருமணம் பற்றி சொல்லத்தேவையில்லை.

சரி நீ இப்ப சொன்னது எதுவுமே தேவையில்லாத விஷயம்தாம்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது, இது என்னோட சொந்த கருத்துதான், "திமூக்க அனுதாபிகள் தொட்டதொன்னூறுக்கும் செயலலிதாவையே மூக்காவுக்கு கம்பேர் பண்ணுறது கொடும! ஏன்யா ! நீங்களே அந்தாள கேவலப்படுத்திட்டு!" ராஜன் மாதிரி சொல்றவங்களுக்கு அப்ப கலைஞர யார் கூடபா ஒப்பிடறது, ஊரே குருடனா இருந்தா ஒன்ற கண்ணந்தான் தலைவன்.. அவருக்கு பொறவு  தமிழ்நாட்ட யாரு காப்பாத்துறது:)

சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்ஸ்லாம் கொடுத்தபோது அடுத்த முதல்வர் தேர்தல்லுல அவர் நிப்பார்னு வோட்டு போடு தயாரா இருந்த என் போன்ற ஆட்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. நல்ல வேளை அவர் அரசியல் பக்கம் வரல, வீட்டு அரசியலே அவருக்கு மண்ட காயுது, சரி வேற யாருக்கு சப்போர்ட் பண்ணலாம்னு பார்ப்போம், முதல்வர் பதவிக்கு போட்டி போடும் அளவிற்க்கு தகுதியுடைய மற்ற கட்சினு பார்த்தா
அ.தி.மு.க. மட்டும் தான்.
தே.மு.தி.க, பாமாக, சமுக மதிமுக போன்ற ஒட்டுன்னிகள்.
காங்கிரஸ், பா.ஜ.க, கம்முயுனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் எப்படி தமிழ் நாட்டை ஒரு மாநிலமா மதிக்கலையோ அதே மாதிரி இங்க அந்த கட்சிகளுக்கு இப்ப மதிப்பில்லை

சே ஏதெதோ எழுதிட்டு போறேன், மத்த ஊர்களை பற்றி தெரியவில்லை ஆனால் சென்னையில் பல பாலங்கள், பூங்காக்கள், நூலகம் போன்றவைகளை கட்டுய கலைஞர் என்று சொல்வது பொய் இல்லை, நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று போஸ்டர் ஒட்டுபவர்களை பார்க்கும் போது இவர் எவ்வளவோ பரவாயில்லை. வோட்டு போடும் வயசு வந்ததும் நான் தி.மு.கவிற்கு ஓட்டு போட்டேன். சைதாப்பேட்டை தொகுதி தி.மு.கவின் கோட்டை என்றழைக்கப்பட்ட இடம் நான் வாக்களித்த மூன்று தேர்தலிலும் தோல்வியை தழுவியது. கடைசி தேர்தலில் தி.மு.கவிற்கு என் வாக்கினை செலுத்தவில்லை.

பதிவ ஆரம்பிச்ச போது என்ன எழுத நினச்சேனோ அதப்பத்தி இன்னும்  ஆரம்பிக்கல, "when great power comes great responsibility" ஸ்பைடர்மேன் மாமா சொல்வார். அப்படி ஒரு பவர் இருக்கும் போது பொறுப்பு கொஞ்சம் அதிகமா தப்பான பக்கம் போவது யாராலும் மறுக்க முடியாது.

எங்க காலேஜ் சிம்போஸியம்ல நாங்க ஆட்டய போட்ட காசு இருபதாயிரம், சுமார் இரண்டு லட்சம் செலவு பண்ற கல்லூரி விழாவிலேயே பத்து சதவிகிதம் சுற்றமும் சூழ செலவு செய்யும்போது மற்றவர்களை பற்றி தவறாக பேசும் நாம் அனைவரும் கபடர்களே.

என்பத்தி ஒன்பது வருட வாழ்கையில் பல சிகரங்களை தொட்ட ஒரு மனிதனின் பிறந்தநாளில் அவரை வாழ்த்துகிறேன்.

பி.கு.

திட்றவங்க வெ.ம.ங்கற ஒரு புது வார்த்தை வந்திருக்கு.. புதுசு கண்ணா புதுசு.