Sunday 12 August 2012

இராவணன்

வருடம் 1985.

அந்தமான் தீவில் உள்ள அந்த  பெயர் தெரியாத  இடத்தின் நிசப்த்தாமான சூழலை பறவைகளின் கூட்டம் கலைக்க,மலை அருவிகளில் இரை தேடிக்கொண்டிருந்த மிருகங்கள் தங்களுக்கும் பறக்கும் சக்தி இல்லையே என்று சோகமாக அவைகளை பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு சிறிய நகரத்தின் பரப்பலவை கொண்ட அந்த தீவின் நடுவே உள்ள எரிமலை தன் பங்கிற்க்கு பெறுமூச்சாக புகையை கக்கிக்கொண்டிருந்தது. அடர்ந்த காடுகளின் நடுவே இருக்கும் அந்த தீவு அப்போதய இந்திய வரைப்படத்தில்  இடம்பிடிக்கவில்லை. அந்த இடத்தை சரியாக பயண்படுத்திக்கொண்ட சில சமூக விரோதிகள் அவ்விடத்தை தங்கள் பாதுகாப்பு அரணாக மாற்றி கஞ்சா பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ஒரு நிழல் சாம்ராஜ்ஜியத்தையே பல்வேறு நாடுகளில் நடத்தி வந்தனர். அந்த பணத்தின் உதவி கொண்டு பல அரசியல்வாதிகள் விலைக்கு வாங்கப்பட்டனர்.  இந்திய புவியியல் துறையிலிருந்த சில கருப்பு ஆடுகளின் உதவியுடன் அவ்விடம் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாக அறிவிக்கப்பட்டு சாதாரண மக்களின் வருகையிலிருந்து தவிர்க்கப்பட்டது.

"வேலை முடிந்தது" வாக்கி டாக்கியில் தகவலை சொன்னார் இரகசிய ஏஜென்ட் வினோத்.

"நல்ல வேலை செய்தாய், எதிரிகள் பார்பதற்க்கு முன் உடனடியாக தீவின் மேற்க்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு நீ கைப்பற்றிய ஆவணங்களுடன் வந்து விடு, அங்கு தயார் நிலையில் மோட்டார் படகு இருக்கும், அதன் உதவியுடன் கரையிலிருந்து பத்து மைல் தொலைவில் இருக்கும் நடுக்கடலுக்கு வந்துவிடு. அங்கு  உனக்காக விமானத்தில் காத்துக்கொண்டிருக்கிறோம்" எனக்கூறினார் அந்த அந்த இரகசிய போலிஸ் குழுவின் தலைவர்.

"நேரம் இன்னும் இருக்கிறது, இவ்வளவு தூரம் வந்ததற்க்கு இது மட்டும் போதாது, சிறிது விளையாடிவிட்டு வருகிறேன்" என்ற பதிலுக்கு "உன் ஆண்மையை காட்ட இது நேரமில்லை உடனடியாக அங்கிருந்து வெளியேறு, இந்த படையை சமாளிக்கும் அளவிற்க்கு நம்மிடம் போதிய பலம் இல்லை" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை அவர்கள் பார்த்த போதை மருந்துகளின் கிடங்குகள் ஒன்றிலிருந்து புகை அத்தீவிலிருந்த எரிமலைக்கு போட்டியாக புகையை வெளியிட்டுக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் எஜென்ட் வினோத் கடற்கரைக்கு வந்தடைந்தார். அங்கு மறைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய மோட்டார் படகில் ஏறி நடுக்கடலை நோக்கி செலுத்தினார். அங்கு அவருக்காக ஒரு மிதக்கும் கப்பலில் குழுவின் தலைவர் காத்துக்கொண்டிருந்தார்.

"இது தான் இரகஸிய போலிஸின் வேலையா?" சற்று கோபத்துடன் கூறினார்  அந்த இரகஸிய போலிஸ் தலைவர் எஜென்ட் சங்கர்.

சற்று நேரத்தில் அவ்விமானம் கடலின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மேலே பறந்தது.

"ஹும், கண்னைக் கட்டிக்கொண்டிருந்து இந்த வேலையை செய்திருக்கலாம் அப்போதாவது சற்று சுவாரஸியமாக இருந்திருக்கும்" சிரித்துக்கொண்டே தான் கைப்பற்றிய ஆவணங்களை கொடுத்தார் எஜென்ட் வினோத்.

"ஏஜென்ட் வினோத், உண்மையாகவே நீ ஒரு மாவீரண்தான், ஆனால் உன் உடலில் உள்ள பலத்திற்க்கு ஈடாக உன் மூலையால் செயல்படமுடிவதில்லை, எப்படியோ நீ செய்த வேலைக்கு நன்றி எனக்கூறிக்கொண்டே தன் கையிலிருந்த துப்பாக்கியைக் கொண்டு தலையில் தாக்கினார் ஏஜென்ட் சங்கர். பத்தாயிரம் அடியில் பறந்துக்கொண்டிருந்த விமானத்திலிருந்து வினோத்தின் உடல் எஜென்ட் சங்கரின் உதவியாளர்களால் வங்கக்கடலில் வீசப்பட்டது.

வருடம் 1995. சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகம்


"எங்க அப்பாவை கொலை செய்தது தீவிரவாதிங்க கிடையாது, நம்ம இரகஸியத்துறையில் வேலை செய்த ஒருவர்தான். ஒரு மிகப்பெரிய சதித்திட்டத்தின் விளைவால்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சதிக்கு காரணமானவர்கள்  இன்னும் இங்கே வேலை செய்து கொண்டிருக்கலாம்." என்று கூறினான் இராமன், ஏஜென்ட் வினோத்தின் மகன்.

" நான் சொல்வதை கேள், உன் அப்பா இங்கில்லாதது  இத்துறைக்கு ஒரு மிகப்பெரிய இழப்பே, அதற்க்காக இத்துறையில் வேலை செய்யும் ஒருவரை நீ குற்றச்சாட்டுவதற்க்கு மிகப்பெரிய செயல். உன் விசாரனையை குறை சொல்லவில்லை, அதற்க்கு ஈடான சாட்சி உன்னிடம் உள்ளதா?" எனக்கூறினார் தலைமை செயலாளர் கனேசன்.

"இருக்கிறது" ஆனால் அது இராவணின் உதவி மூலம் தான் நமக்கு கிடைக்கும்.

"உன் உடன்பிறந்த தம்பி இராவணனா?"
ஆச்சரியத்துடன் கூறினார் கனேசன்.


தொடரும்......


பிகு.

வழக்குத்தமிழில் எழுத மிகவும் சிரமமாக உள்ளதால், கதையில் உள்ள அனைவரும் சரியான தமிழில் பேசுவது போல் எழுதியுள்ளேன். சாரி :)





No comments:

Post a Comment