எனக்குள் ஒரு கலைஞர்.
சிறு வயது முதல் அரசியலை பொறுத்தவரை என் ஹீரோ கலைஞர் என்று அழைக்கப்படும் மு.க. கருணாநிதிதான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் தமிழ்நாட்டின் முதல்வராக செல்வி ஜெயலலிதா இருந்தார். எங்கள் வீடு அண்ணாசாலை என்றழைக்கப்ப்டும் மௌண்ட் ரோடில் இருந்தது, ஒவ்வொறு முறை முதல்வர் அச்சாலையை கடக்கும் போது எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை பந்த் தினத்தை போல் காட்சியளிக்கும். அவர் வளர்ப்பு மகன் திருமணம் பற்றி சொல்லத்தேவையில்லை.
சரி நீ இப்ப சொன்னது எதுவுமே தேவையில்லாத விஷயம்தாம்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது, இது என்னோட சொந்த கருத்துதான், "திமூக்க அனுதாபிகள் தொட்டதொன்னூறுக்கும் செயலலிதாவையே மூக்காவுக்கு கம்பேர் பண்ணுறது கொடும! ஏன்யா ! நீங்களே அந்தாள கேவலப்படுத்திட்டு!" ராஜன் மாதிரி சொல்றவங்களுக்கு அப்ப கலைஞர யார் கூடபா ஒப்பிடறது, ஊரே குருடனா இருந்தா ஒன்ற கண்ணந்தான் தலைவன்.. அவருக்கு பொறவு தமிழ்நாட்ட யாரு காப்பாத்துறது:)
சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்ஸ்லாம் கொடுத்தபோது அடுத்த முதல்வர் தேர்தல்லுல அவர் நிப்பார்னு வோட்டு போடு தயாரா இருந்த என் போன்ற ஆட்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. நல்ல வேளை அவர் அரசியல் பக்கம் வரல, வீட்டு அரசியலே அவருக்கு மண்ட காயுது, சரி வேற யாருக்கு சப்போர்ட் பண்ணலாம்னு பார்ப்போம், முதல்வர் பதவிக்கு போட்டி போடும் அளவிற்க்கு தகுதியுடைய மற்ற கட்சினு பார்த்தா
அ.தி.மு.க. மட்டும் தான்.
தே.மு.தி.க, பாமாக, சமுக மதிமுக போன்ற ஒட்டுன்னிகள்.
காங்கிரஸ், பா.ஜ.க, கம்முயுனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் எப்படி தமிழ் நாட்டை ஒரு மாநிலமா மதிக்கலையோ அதே மாதிரி இங்க அந்த கட்சிகளுக்கு இப்ப மதிப்பில்லை
சே ஏதெதோ எழுதிட்டு போறேன், மத்த ஊர்களை பற்றி தெரியவில்லை ஆனால் சென்னையில் பல பாலங்கள், பூங்காக்கள், நூலகம் போன்றவைகளை கட்டுய கலைஞர் என்று சொல்வது பொய் இல்லை, நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று போஸ்டர் ஒட்டுபவர்களை பார்க்கும் போது இவர் எவ்வளவோ பரவாயில்லை. வோட்டு போடும் வயசு வந்ததும் நான் தி.மு.கவிற்கு ஓட்டு போட்டேன். சைதாப்பேட்டை தொகுதி தி.மு.கவின் கோட்டை என்றழைக்கப்பட்ட இடம் நான் வாக்களித்த மூன்று தேர்தலிலும் தோல்வியை தழுவியது. கடைசி தேர்தலில் தி.மு.கவிற்கு என் வாக்கினை செலுத்தவில்லை.
பதிவ ஆரம்பிச்ச போது என்ன எழுத நினச்சேனோ அதப்பத்தி இன்னும் ஆரம்பிக்கல, "when great power comes great responsibility" ஸ்பைடர்மேன் மாமா சொல்வார். அப்படி ஒரு பவர் இருக்கும் போது பொறுப்பு கொஞ்சம் அதிகமா தப்பான பக்கம் போவது யாராலும் மறுக்க முடியாது.
எங்க காலேஜ் சிம்போஸியம்ல நாங்க ஆட்டய போட்ட காசு இருபதாயிரம், சுமார் இரண்டு லட்சம் செலவு பண்ற கல்லூரி விழாவிலேயே பத்து சதவிகிதம் சுற்றமும் சூழ செலவு செய்யும்போது மற்றவர்களை பற்றி தவறாக பேசும் நாம் அனைவரும் கபடர்களே.
என்பத்தி ஒன்பது வருட வாழ்கையில் பல சிகரங்களை தொட்ட ஒரு மனிதனின் பிறந்தநாளில் அவரை வாழ்த்துகிறேன்.
பி.கு.
திட்றவங்க வெ.ம.ங்கற ஒரு புது வார்த்தை வந்திருக்கு.. புதுசு கண்ணா புதுசு.
6 comments:
வெ. ம. :))
ச்சும்மாதான்....
நண்பரே!
இந்த word verification எடுத்திடலாமே
நட்புடன்
நன்றி.. இப்போது எடுத்துவிட்டேன்..
u r mentally disturbed ,pls consult psephologist
@anony if u r one of them can i have an appointment :)
ஏதோ சொல்ல ஆசை படுற மாதிரி இருக்கு..ஆனா ஒண்ணுமே புரியல.
Post a Comment